Sunday, October 19, 2014

திருமண வாழ்த்து கவிதைகள்



திருமண வாழ்த்து கவிதைகள்



                                                 1. திருமண வாழ்த்து கவிதைகள்

இரு உள்ளங்கள் 
இணையும் ஆரம்பம் 
திருமணம் 
இணைந்த இரு கரம் 
அன்பினில் எழுதிய காவியம் 
இல்லறம் 


                                                2. திருமண வாழ்த்து கவிதைகள்


வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.! 

மேகமென்னும் கூந்தலினை 
மின்னல் கீற்றால் தலை சீவி. 
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால் 
மிதமாக அலங்கரித்து. 
முகமென்னும் பால் நிலவாம் 
வானவில்லின் சாயம் பூசி, 
வானம் கொண்ட நிறமதிலே.. 
அழகான சேலை நெய்து.. 
கட்டிய பெண் வந்தாள். 
கெட்டி மேளம் கொட்டிட தான். 
விண்மீன்கள் புன்னகையால் 
புது கவிதைகள் பாடிடுமே. 
பூங்காற்றும் தென்றலும் சேர 
இசை சாரல் தூவிடுமே. 
மஞ்சள் வேர் தனிலே 
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே. 
குங்குமமும் கன்னங்களில் 
அழகாஇ சிவந்திடுமே. 
சூரியனும்,சந்திரனும் 
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே. 
கெட்டி மெளத்துடன்.. நாதமும் 
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே. 
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.! 


3. திருமண வாழ்த்து கவிதைகள்

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

                                              
                                                4. திருமண வாழ்த்து கவிதைகள்


காதலும் கவிதையுமான சங்கமம் 
நேசித்த மனங்கள் வாழ்வின் துவக்கம் 
இனிய விடியலில் திருமண விழாக் கோலம் 
இனி நாளும் வாழ்வே விழாக் காணும்!!! 

புரிதலும் அறிதலும் ஒன்றாகி 
அன்பும் காதலும் தினம் பெருகி 
ஒருமித்த எண்ணத்தில் நறுமண வாழ்வாகி 
உருவாகிடும் கவிதையே மழலையாகி!!! 
சீரும் சிறப்பும் வளமுமாகி 
நாளும் நலனில் உடலுமாகி 
தேனில் நனைந்த பலாவாகி 
வாழ்க்கை தெவிட்டா சுவையுமாகி!!! 
ஹேயேந்தினி கலையும் இணைபிரியாதவராகி 
இவர்போல் வாழ்ந்தோர் எவருமிலாதவருமாகி 
உறவும் ஊரும் போற்ற நற்பெயருமாகி 
அனைவர்க்கும் உதாரண தம்பதியராகி!!! 
வாழ்க்கையில் இன்பம் ஊற்றாகி 
ஆலம் விழுதாய் குலம் தழைத்தே 
வளம் நலம் வாழ்வினில் வசமுமாகி 
வாழ்வாங்கு ஆயுளும் வாழ்ந்திடுவீர்!!! 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
நேசித்த இரு மனங்கள் திருமண விழாவில் இணையும் இந்த நன்னாளினில், பொன்னாளினில் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களுடன், 
அன்புடன், 
________________
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



                                                   5. திருமண வாழ்த்து கவிதைகள்


வாழ்க்கைப் பயணத்தின் 
இனிய துவக்க விழா 
துணையொடு கரமிணையும் 
வண்ணமிகு திருமண விழா 

செல்வன் ______
செல்வி ______
இணைபிரியா வாழ்க்கையிலே 
இன்பமே என்றும் கொள்வீர் 
முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே 
முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர் 
செல்வங்கள் பதினாறும் 
குறைவின்றி நீவீர் பெறுவீர்!!! 
வாழையாய் வம்சம் தழைக்கும் 
வளமுடன் வாழ்க்கை செழிக்கும் 
கருத்தொருமித்த தம்பதியராய் 
சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்!!! 
உதாரணத் தம்பதியராய் 
ஊர் போற்ற... உறவும் போற்ற... 
இணைபிரியாத வாழ்வினிலே 
நூறாண்டு காலம் வாழ்ந்திடவே 
உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.... 


                                                    6. திருமண வாழ்த்து கவிதைகள்


இல்லறமெனும் 
இன்பச் சோலையிலே 
இணைப் பறவைகளாய் 
மெல்லிசை பாடி 
மணமன்றலில் கூடும் 
மணமக்களே..! 

நீவீர் 
நல்லறம் பேணி 
நலமுடன் வாழ்வீர்.! 
சொல்லறம் பழகி 
சொர்க்கம் காண்பீர்! 
மனையறம் துலங்கி 
மாண்புடன் மகிழ்வீர்.! 
பேறுகள் பல பெற்று 
பெயர் நிலைக்க வாழ்வீர்.! 
இன்ப துன்பத்தில் 
இரண்டெனக் கலந்து 
ஒன்றென ஆவீர்.! 
அன்பு மிகுந்து 
அக்கறை நயந்து 
பண்பில் கனிந்து 
பாசத்தில் இணைந்து 
பாருலகம் வியந்து 
போற்றிப் புகழ்ந்திட 
பல்லாண்டு வாழ்க .! வாழ்கவே.! 

No comments:

Post a Comment