Sunday, November 23, 2014

உன்னாலே உயிர் வாழ்கிறேன்


 உன்னாலே உயிர் வாழ்கிறேன்


இசை எனக்கு 
தேவையில்லை 
உன் மார்பில் சாய்கையில் 
கேட்கும் 
இதயத்துடிப்பின் ஓசை 
போதுமடா !!! 






-------------------------------------------------------------------------------------------------------------------


என் தோள்களில் 
நீ சாய்ந்து இருந்தால் 
என் கவலைகள் 
மட்டும் அல்ல
என் கண்ணீரும் 
மறைந்து விடும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உன் சொந்தங்களை 
கை விட்டு விட்டு 
என் கரம் பற்றுகிறாய்
கை விட மாட்டேன் 
உன்னை...
என் உயிரின் 
கடைசி மூச்சு வரையில்..

 ------------------------------------------------------------------------------------------------------------------

காதலில் தோற்றவர்கள் எல்லாம் 
காதலை 
மறந்து வாழவில்லை. . 
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு 
வாழ்கிறார்கள். !!!
 ------------------------------------------------------------------------------------------------------------------



உண்மையாக நேசிப்பவர்களை
ஒரு நிமிடம் கண்களை
மூடி நினைக்கும்போது
பிரிவின் ஏக்கம் விழி
ஓரம் கசிகிற கண்ணீர்
துளிகளில் தெரியும் ! 

 ---------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்களை காதலித்து 
ஏமாற்றும் பெண்கள் , 
இன்னொருவனை
திருமணம் செய்த பின் தான்
உண்மை காதலை 
உணர்கிறார்கள்.....

சில பெண்களுக்கு மட்டும

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------

எப்படியடா உன்னால் 
மட்டும் முடிகிறது 
என்னோடு இருந்த 
நிமிடங்களையும் 
என்னோடு பேசிய 
வார்த்தைகளையும் 
மறந்து விட்டு இருக்க 
என்னால் ஏனோ 
உன்னையும் 
உன் நினைவுகளையும் 
மறக்க முடியவில்லை.

 -----------------------------------------------------------------------------------------------------------------------

சில நாட்கள் 
உன்னோடு பேசாமல் 
இருந்திட முடியும் 
ஆனால் 
சில நொடிகள் 
உன் நினைவுகளை 
மறந்து இருந்திட முடியாது ! 
--------------------------------------------------------------------------------------------------------------------------


இது போதும் எனக்கு
இது போதுமே...!
வேறென்ன வேண்டும்
நீ போதுமே.! 

 ------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னால சிரிக்கும் போதும்
உனக்காக அழும் போதும்
தாண்டா
நான் உன் மேல வெச்சிருக்குற
காதல் புரியுது..
----------------------------------------------------------------------------------------------------------------------


முகமும் பார்க்காமல்
உதடுகள் பேசாமல்
காதுக்கும் கேளாமல்
அன்பானவர்கள் பேசும்
ஒரே மொழி "நினைவுகள்"...

 ---------------------------------------------------------------------------------------------------------------------

உன் கூட இருந்த ஒவ்வொரு நொடியையும் 
மறக்க முடியுமா ????
தினம் தினம் அதையே நெனச்சி 
செத்துட்டு இருக்கேன்டி



Saturday, November 22, 2014

Kadhal kavithaigal

பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

----------------------------------------------------------------------------------------------

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

----------------------------------------------------------------------------------------------

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரியாய்..

---------------------------------------------------------------------------------------------------------

எனக்கான உலகமாய் நீ இருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பு
இருந்தது உண்மைதான்
அதுசரி. .
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம். !

----------------------------------------------------------------------------------------------

காதலில் எமாற்றுபவர்க்கு வாழ்நாளில் வசந்தம்
வரவே வராது அது பாவத்தின் சாபம். .
ஏமார்ந்தவர்களுக்கு வசந்தம் வந்தாலும்
சுகம் தராது இது சோகத்தின் தாக்கம். !


------------------------------------------------------------------------------------------------------

சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்
ஆனால். .
உண்மையான அன்பு கிடைக்கும் போது தான்
உன்னையே உனக்கு பிடிக்கும். !


-------------------------------------------------------------------------------------------------------

எப்படியடா உன்னால்
மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை.


--------------------------------------------------------------------------------------------------

முன்பெல்லாம்
என்னுடன் பேசுவதற்கு
ஒவ்வொரு காரணங்களை
உருவாக்கி கொள்வாய்
இப்பொழுதெல்லாம்
என்னுடன் பேசுவதை
தவிர்ப்பதற்காகவே
புது புது காரணங்களை
தேடி கண்டு பிடித்து
விடுகிறாய்..♡


---------------------------------------------------------------------------------------------------

அன்புக்கு அடிமையாகின்றவர்களை
உங்கள் திமிருக்கு அடிமையாக்க
நினைகாதீர்கள் இதன் விளைவு
அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்..♡


--------------------------------------------------------------------------------------

யார் சொன்னது?
பெண் மட்டும் தான்
உயிரை சுமப்பாள்
என்று,!

ஒவ்வொரு ஆணின்
இதயத்தை தொட்டு பாருங்கள் அதில்
ஒரு பெண்ணின்
நினைவு உயிராக
இருக்கும்.!

-------------------------------------------------------------------------------------------------------


உன்னோடு
சேரும் கனவு
வெறும்
கனவாகவே
போய்விட்டதடா..
      

      

உனக்கான என் காத்திருப்புகள்.

மனைவியை மறக்க வைக்கும்
தாயின் பாசத்தையும்.....
தாயை நினைக்க வைக்கும்
மனைவியின் பாசத்தையும் பெற்றவனே
உண்மையான அதிஷ்டசாலி.


--------------------------------------------------------------------------------------------




நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !

என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !

உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !

என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..

தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?

நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????

நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !

உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !

நீ கூறினாலே,
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்லி
நினைப்பதற்கும் மறப்பதற்கும்
காதல் என்ன ???????

உன் வாழ்க்கை
உன் குடும்பம் என

உனக்காக யோசித்தாயே ?

எனக்காக யோசிக்க
இன்று தான்
நேரம் கிடைத்ததோ ??

என் நேரம் அனைத்தும்
உனக்காக ஒதுக்கிவிட்டேன்..

என்றும்
உன் நினைவுகளே
என் வாழ்க்கை,

என்ற நிலையில் நான் !

நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன் !

நீயும் நீயாகவே
இருக்க கற்றுக்கொள் !
--------------------------------------------------------------------------------------------------------
பிடித்து இருக்கிறது உன்னை
என்று சொன்னாய் என்னை
பிடித்திருந்தது உன்னை
பிடி கொடுதேன் என்னை...

பின்பு தான் தெரிந்தது.. எனக்கு
பின்னால் உனக்கு கரம் கொடுக்க
பிரபலங்கல் இருக்கிறது என்று
பிராபளம் வரும் என்று.. உன்னை...

விட்டு ஒதிங்கினேன் அன்று
மீண்டும் வருகிறாய் இன்று
பிரபலங்கல் எல்லாம் என்னை
விட்டு பறந்து விட்டன.. இனி...

பிராபளம் இல்லை என்று
உன் கரம் என்ன
கண் காட்சி பொருளா?..
கண்டவர்கள் எல்லாம் தொட்டு பார்க்க....
------------------------------------------------------------------------------------------------------
நீ என்னை நேசிக்க மறந்துவிட்ட பின்பு நான் என்னை நேசிக்க மறந்துவிட்டேன் ஏன் இந்த உலகையே நான் நேசிக்க மறந்துவிட்டேன் ஆனால் உன்னை மட்டும் நேசிக்க மறந்ததில்லை காரணம் என்னை மீறி உன்னில் உயிரான நேசம் கொண்டதால்....
--------------------------------------------------------------------------------------------------------------
யாருக்கும் தெரியாமல் உன்னை நேசிக்கிறேன் ,
உனக்கே தெரியாமல்
ஒரு நாள் என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில..