Friday, February 13, 2015

இந்த காதல் மட்டும்..!

அதிகமாக பேசிகொண்டிருந்தவள்
இன்று ஊமையாய் போகிறாள்..!
ஊமையாக இருந்த நான்
இன்று உளறிகொண்டிருக்கிறேன்..!

ஏனோ தெரியவில்லை
நம்மை மாற்றிய 
இந்த காதல் மட்டும்
இன்னும் மாறவில்லை..!

-------------------------------------------------------------------------------------------------------



கண் விழிக்க
ஆசையில்லை,
என் உறக்கத்தின்
கனவில்
நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை
வெறுக்கிறேன்,
விடியாத இரவும்,
முடியாத கனவும்
வேண்டும்..
உன்னை
கரம் பிடித்து
உலா வரும் கனவு


----------------------------------------------------------------------------------------


காதல் மட்டும்
வந்தால் போதும்..! 
நதியாக அவளும்
கரையாக நீயும்
விரலாக அவளும்
நகமாக நீயும்
கவிதையாக அவளும்
கற்பனையாக நீயும்
விழியாக அவளும்
இமையாக நீயும்
முத்தமாக அவளும்
சப்தமாக நீயும் ஆவாய்..!

உயிரை நீ கேட்டால்..!

                                                                                  
 
பெண்ணே!! நீயின்றி 
தனியாய் நான் 
தவியாய் தவிக்கிறேன்..!
துணையாய் நீ வந்தால்
துடியாய் துடிப்பேன்..!
அன்பை நீ கேட்டால்
மாரி என பொழிவேன்..!
முத்தம் நீ கேட்டால்
சரமாரி அதை தருவேன்..!
உயிரை நீ கேட்டால்
சுகமாய் அதை விடுவேன்..!
தஞ்சம் என வந்தால்
நெஞ்சம் அதை தருவேன்..!
மஞ்சம் வர மறுத்தால்
கொஞ்சம் நான் தவிப்பேன்..!
வஞ்சம் நீ புரிந்தால்
எச்சம் என உமிழ்வேன்..!  
 
வெட்கம் நீ கொண்டால்
துக்கம் அதை அடைவேன்..!
எப்போதுமே 
உடல் வெப்பம் நீ தந்தால்
சொர்க்கம் அதை அடைவேன்..!
அதையே
நித்தம் நீ தந்தால்
தூக்கம் அதை மறப்பேன்..!
என்றும்   
பக்கம் நீ இருந்தால்
உலகம் அதை ஆள்வேன்..!