Sunday, June 15, 2014

இரு கைகளுமின்றி மேசைப் பந்தாட்டத்தில் கலக்கும் நபர்

இரு கைகளும் இல்லை என்பதையே மறக்கடிக்கச் செய்யும் விதமாக எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) கலக்குகிறார். எகிப்தைச் சேர்ந்த இப்றாஹிம் ஹமதோ என்பவர் 10 வயதில் விபத்தொன்றின்போது தனது இரு கைகளையும் இழந்துள்ளார். ஆனாலும் தனது விருப்பத்துக்குரிய மேசைப் பந்தாட்டத்தினை கைவிடாமல் பயிற்சி மேற்கொண்டுள்ளார். முயற்சி இருந்தால் எதுவும் தடை இல்லை என்பதுபோல் தற்போது பந்தினை பரிமாற கால்களையும் துடுப்பினை வாயினால் பிடித்துக்கொண்டு அபாரமாக விளையாடுகிறார் இப்றாஹிம்.

54791 450x247 இரு கைகளுமின்றி மேசைப் பந்தாட்டத்தில் கலக்கும் நபர் (Video)

 ‘எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த விடயம் எனது மனைவி. எனக்கு எல்லாமே அவர்தான். இரண்டாவது பகுதி மேசைப் பந்தாட்டம். இதில் எனது வெற்றியை கண்டேன். நான் வெற்றிபெறும் ஒவ்வொரு புள்ளியு; எனக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது’ என இப்றாஹிம் தெரிவித்துள்ளார்

உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்

உயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம் உயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம் சவூதி நாட்டின் இராணுவ வீரர் விசேட அணி ஒன்று கொடிய விச பாம்புகளை உயிரோடு துடி துடிக்க உண்ணும் பயங்கர மிரட்டும் படங்கள் வெளியாகியுள்ளது . அத்துடன் இவர்கள் பாம்புகள்.இரத்தங்களை குடிக்கும்மிரட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன . அமெரிக்கா .இஸ்ரேல் .இலங்கை .போன்ற நாட்டு படைகள் இவ்விதம் செய்து வந்துள்ளநிலையில்தற்போது அந்த பட்டியலில் சவுதி இராணுவம் இப்படி செய்வது வெளியாகியுள்ளது ,
பாம்பு 345x350 உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்
உயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம் உயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம் சவூதி நாட்டின் இராணுவ வீரர் விசேட அணி ஒன்று கொடிய விச பாம்புகளை உயிரோடு துடி துடிக்க உண்ணும் பயங்கர மிரட்டும் படங்கள் வெளியாகியுள்ளது . அத்துடன் இவர்கள் பாம்புகள்.இரத்தங்களை குடிக்கும்மிரட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன . அமெரிக்கா .இஸ்ரேல் .இலங்கை .போன்ற நாட்டு படைகள் இவ்விதம் செய்து வந்துள்ளநிலையில்தற்போது அந்த பட்டியலில் சவுதி இராணுவம் இப்படி செய்வது வெளியாகியுள்ளது

உலகின் ஒரேயொரு ரோபோ இசைக்குழு

முற்றிலும் ரோபோக்களை கொண்ட இசைக்குழுவொன்று ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கொம்பிரஸர்ஹெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைக்குழுவில், 5 அடி உயரமான 3 ரோபேக்கள் அங்கம் வகிக்கின்றன.  ட்ரம்ஸ், கிட்டார், பாஸ், இசைக்கருவிகளை இசைக்கின்றன.   மொஸ்கோவில் நடைபெறும் சர்வதேச அன்ட்ரோய்ட் கண்காட்சியின்போது இந்த ரோபோக்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகில் ரோபோக்களை மாத்திரம் அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரேயொரு  இசைக்குழு இதுவாகும் கழிவு உலோகங்கள் மூலம் இந்த ரோபோக்கள் நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இசைக்குழுவின்  யுஉந ழக ளியனநள  எனும் பாடல் யூ ரியூப் இணையத்தளத்தில் 63 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்வையிடப்பட்டுள்ளது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்)
55361 450x299 உலகின் ஒரேயொரு ரோபோ இசைக்குழு 55362 450x313 உலகின் ஒரேயொரு ரோபோ இசைக்குழு 55364 450x309 உலகின் ஒரேயொரு ரோபோ இசைக்குழு

எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டி – கலக்கல் படங்கள்

எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டியொன்று சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.  8 நாடுகசை; சேர்ந்த போட்டியாளர்கள், ஓவியம் வரையப்பட்ட மாடுகளை இப்போட்டியில் காட்சிப்படுத்தினர்.  இப்போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ஒரு லட்சம் சீன யுவான் (சுமார் 20 லட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்பட்டதாக சீன ஊடங்கள் தெரிவித்துள்ளன. (படங்கள் ஏ.எவ்.பி., ரோய்ட்டர்ஸ்)
55501 450x303 எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டி   கலக்கல் படங்கள் 55502 450x321 எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டி   கலக்கல் படங்கள் 55503 450x303 எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டி   கலக்கல் படங்கள்

காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் இரட்டை பிறவியாய் பிறந்த சகோதரிகள், கைப்பேசி, பேஸ்புக், உணவு மற்றும் காதலன் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஏமி மற்றும் பெக்கி கலாஸ் (46) தங்கள் பேஸ்புக் கணக்கு, படுக்கை அறை, கைப்பேசி, அவர்கள் செய்யும் தொழில் ஆகிய அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் காதலனையும் பகிர்ந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், ஒரே மாதிரி ஆடைகளை வெவ்வேறு நிறத்தில் அணிகின்றனர். தற்போது இவர்களுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் நல்ல வாழ்க்கை துணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள், தாங்கள் சாப்பிடும் உணவு அனைத்தையும் அளந்து சமமாக உண்பதால், அவர்கள் இடையும், உடல் அமைப்பும் ஒரே மாதிரி உள்ளது. இதுகுறித்து இவர்கள் கூறுகையில், நாங்கள் சந்தோஷமாக எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்றும் இருவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைய ப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
twins lover 002 1 450x326 காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் (படங்கள் இணைப்பு)  twins lover 003 421x350 காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் (படங்கள் இணைப்பு)  twins lover 004 450x303 காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் (படங்கள் இணைப்பு)

அரை நிர்வாண கோலத்தில் வசிக்கும் பழங்குடித் தாயுடன் மீண்டும் இணைந்த அமெரிக்க இளைஞர்

அமெரிக்காவில் வசித்துவந்த இளைஞர் ஒருவர், தென் அமெரிக்க பழங்குடி இனத்தவர்களுடன் அரை நிர்வாண நிலையில் வசிக்கும் தனது தாயுடன் மீண்டும் இணைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. வெனிசூலாவிலுள்ள பழங்குடியை வம்சாவளியைச் சேர்ந்த யரிமா என்ற 30 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க மாணுடவியல் பேராசிரியரான கென்னத் குட் என்பவரை திருமணம் செய்தவர். தானும் அந்த பழங்கு இனத்தைச் சேர்ந்தவர் என கென்னத் குட் கருதினார்.
19  வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து வெனிசூலாவுக்குத் திரும்பிய யரிமா மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பாமல் தனது யனோமமி எனும் பழங்குடி சமூகத்தவர்களுடனேயே தங்கிவிட்டார். அப்பழங்குடி இனத்தவர்களின் கலாசாரத்துடன் அவர் ஒன்றிப்போய்விட்டார்.
5610Thum 450x337 அரை நிர்வாண கோலத்தில் வசிக்கும் பழங்குடித் தாயுடன் மீண்டும் இணைந்த அமெரிக்க இளைஞர்
இதேவேளை, அமெரிக்காவில் பிறந்த அவரின் மகன்களில் ஒருவரான டேவிட் குட், தான் பழங்குடியினத்தை சேர்ந்தவன் என்பதை தனது சகாக்களுக்கு அறிவிக்க சங்கடப்பட்டுக்கொண்டிருந்தார். தனது தாய் குறித்து விசாரித்தவர்களிடம் அவர் இறந்துவிட்டதாக கூறிவந்தார்.
டேவிட் குட்டுக்கும் அவரின் தாயாருக்கும் இடையிலான தொடர்புகளும் விடுபட்டு போயின. ஆனால், தென் அமெரிக்க பழங்குடி இனத்தவர்கள் தொடர்பான ஆவணப் படமொன்றில் தனது தாயார் இருப்பதைக் கண்ட டேவிட் குட், தனது தாயாரைத் தேடிச் சென்றார்.  அங்கு தனது தாயாரைக் கண்ட டேவிட் குட், தற்போது யனோமமி பழங்குடியினரின் கலாசாரத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளாராம்.

Instagram அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம்

பேஸ்புக் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு தற்போது மிகவும் பிரபல்யம் அடைந்துவரும் Instagram சமூகவலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பதிப்பில் Instagram தளத்தில் பதிவேற்றப்படுபவற்றினை தானாகவே பேஸ்புக் தளத்தில் பகிரும் வசதி நீக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் Instagram இனை பயன்படுத்துவதுடன், இவர்களில் அதிகமானவர்கள் மொபைல் சாதனங்களிலேயே இவ்வலைத்தளத்தினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
instagram automatic sharing 001 450x303 Instagram அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம்

மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியுமா..?

மின்னல் எப்படி உருவாகிறது ? மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியுமா விஞ்ஞானிகளின் பார்வையில் !! வான்வெளியில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கு குறைவான நேரத்தில் ஒளிக்கீற்றாகக் கொடி பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னலாகிறது.
மழையின் சீற்றத்தின்போதும், எரிமலைகளின் சீற்றத்தின்போதும், புழுதிப் புயல்களின் போதும் மேகங்களின் உராய்வால் மின்னல் தோன்றுகிறது. மின்னலின் வேகம் மணிக்கு 36 ஆயிரம் கி.மீ. தூரம். 30 லட்சம் சென்டிகிரேடு வரை வெப்பத்தை மின்னல் வெளியிடுகிறது. அந்த மிதமிஞ்சிய வெப்பத்தில் சில வேளைகளில் மணல் துகள்கள் உருவாகி ஒன்று சேர்ந்து ஃபல்கரைட் எள்னும் கண்ணாடிக் குழாய்களாகக்கூட மாறும்.கட்டுப்படுத்த இயலாத காட்டுத் தீ ஏற்படுத்தும் சாம்பல் புழுதிகூட மின்னல் தோன்றக் காரணமாகும். மேகத்தினுள் பொதிந்திருக்கும் பனிக்கட்டி மின்னலைத் தூண்டும் காரணியாக இருக்கலாம். ஆனாலும், மின்னல் எப்படி உருவாகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டு பிடிக்கப்படாமலேயே இருக்கிறது. மின்னல் மின்னும்போது வெளியிடப்படும் மிக அதிக வெப்பம் அதைச் சுற்றிலும் உள்ள காற்றினில் ஓர் அலையைக் கிளப்புகிறது. அதிக அளவு அழுத்தத்துக்குள்ளான காற்று, அழுத்தக் குறைவான பகுதிக்கு அதிவேகமாக இடமாற்றம் செய்யும் போது கிளம்பும் ஒலியே இடி ஓசை.
lighting 450x281 மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியுமா..?

ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் ஒளி தெரிந்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு இடியுடன் ஒலி கேட்கிறது.தாமஸ் ஃப்ரான்கோய்ஸ் டையபார்ட், டி லோர்ஸ் ஆகிய பிரஞ்சு விஞ்ஞானிகள் பட்டம் ஒன்றைப் பறக்கவிட்டு, மின்னல் தோன்றும் போது அதில் மின்சாரம் கடத்தப்படும் ஆராச்சியை முதலில் நிகழ்த்தினார்கள். சில வாரங்களிலேயே பெஞ்சமின்ஃப்ராங்க்ளினும் இதேபோல ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிகளைப் பின்பற்றி மின்னலை ஆராய்ச்சி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் ரிச்மேன் மின்னல் தாக்கி இறந்தார். அவரைத் தாக்கிய மின்னல் பந்து மின்னல் வகையைச் சேர்ந்தது. நாலணா நாணய அளவில் இருந்து பல மீட்டர்கள் வரை விட்டம் கொண்ட உருண்டை வடிவமான மின்னல்களைப் பந்து மின்னல் என்கிறார்கள்.
மின்னல் தாக்குதல் பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. 1769ல் இத்தாலியில் செயின்ட் நாஸைர் தேவாலயத்தை மின்னல் தாக்கியது. அங்கே பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 100 டன் வெடிமருந்து தீப்பற்றிக்கொள்ள, மூவாயிரம் நபர்கள் இறந்தனர். மின்னல் தாக்கிய ப்ரெஸிகா நகரில் ஆறில் ஒரு பங்கு தரைமட்டம் ஆனது. 1902-ல் பாரிஸில் ஈஃபிள் கோபுரம் மின்னலால் தாக்கப்பட்டது. 1994-ல் எகிப்தில் ட்ரோங்கா பகுதியில் எரிபொருள் டேங்குகளை மின்னல் தாக்கியதில் 469 பேர் உயிரிழந்தனர். மிக அரிதாக மின்னல்கள் விமானங்களைத் தாக்குவதும் உண்டு.
மின்னலால் தாக்கப்படும் சிலர் பார்வையிழப்பதற்குக் காரணம் மின்னலின் அதீத ஒளி அல்ல. மின்னல் மூலம் கடத்தப்படும் மின்சாரம் விழித்திரையையும் பார்வை நரம்புகளையும் பாதிப்பதே காரணம். கனடாவின் வான்கூவர் பகுதியில் காதில் சிறு ஸ்பீக்கர் பொருத்திப் பாட்டுக் கேட்ட ஒருவரை இயர் போன் மூலம் மின்னல் தாக்கியது.
மின்னல் மரங்களைத் தாக்கும் என்பது உண்மைதான். மின்னல் பாயும்போது மரத்தின் கடினமான மையப்பகுதி, நீராவி அளவுக்கு எக்கச்சக்கமாக சூடாகி வெளிப்புறப் பட்டையைப் பிளந்து வெளியேறும். இப்படிப்பட்ட நேரங்களில் மரத்துக்கு அருகில் இருப்பவர்கள் உயிர் தப்பமுடியாது. தூரக்கிழக்கு நாடுகள் மற்றும் சைபீரியா போன்ற பகுதிகளில் உள்ள காடுகளில் தீ உண்டாவதற்கு முக்கியக் காரணம் மரங்களை மின்னல் தாக்குவதே
எல்ம், ஓக் மற்றும் பைன் வகை மரங்கள் மின்னல் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகுபவை. தேக்கு போன்ற மரங்கள் உயரமாக வளரும் இயல்புடையவை. ஏராளமான சல்லிவேர்கள் மட்டுமே கொண்டவை. இலைப்பரப்பும் அதிகம் கொண்டவை. இவற்றைப் பெரிய கட்டிடங்களுக்கு அருகில் வளர்ப்பதால் இம்மரங்கள் மின்னலைக் கடத்திப் பூமியில் விட்டுவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.
கிளைகள் பிரியும் விதம், தோன்றும் இடம், அதன் வடிவம் போன்றவற்றின் அடிப்படையில் மின்னல் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
1900-ல் நிகோலா டெஸ்லா என்ற செர்பிய விஞ்ஞானி செயற்கையாக மின்னலை ஏற்படுத்திக் காட்டினர்.மின்னலின் பாதிப்பைத் தடுக்கப் பெரிய கட்டிடங்களில் இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவார்கள். இது மின்னலை பூமிக்குள் கடத்திவிடும். கட்டிடங்களுக்குப் பாதிப்பு இருக்காது. மின்னலின்போது வெளிப்படும் சக்கியைப் பயன்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை நாசா வெளியிட்டது. பின் அது பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதில் இசெட்-2 என்ற விண்வெளி உடை 62 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டது.
இந்த உடை தொழில்நுட்பம் நிறைந்ததாக, வருங்காலத்தில் நாள்தோறும் அணியும் உடை போன்று காட்சி தருவதாக வடிவம் கொண்டது. இந்த உடையின் பயன்பாடு, விண்வெளியில் நடக்கும்போது வீரர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு உதவும் வகையில் இருக்கும்.
இது கடந்த 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட இசெட்-1  ரக விண்வெளி ஆடையின் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். மென்மையான தலை பகுதி கொண்ட இசெட்-1ல் இருப்பதை போன்று இல்லாமல், நீண்ட நாட்கள் உழைக்கும் வகையிலான தலை பகுதியும், கீழ் பகுதியில் உராய்வால் ஏற்படும் காயங்களை தடுக்கும் வகையிலும் இசெட்-2 ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
mars dress nasa 003 358x350 செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா
அதி நவீன வடிவிலான, தோள் மற்றும் இடுப்பு இணைப்பு பகுதிகளின் இயங்கு தன்மையை அதிகரிக்கும் வகையில், உருளும் தன்மை உடைய சிறிய இரும்பு குண்டுகள் கொண்டு இவை உருவாக்கப்பட்டு உள்ளன.
தலை பகுதியில், மின் வயர்கள் இணைக்கப்பட்டு அதனால், ஒளிரும் தன்மையுடையதாக காணப்படும் தலை பகுதி எளிதில் விண்வெளி வீரர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ள உதவுகிறது.
விண்வெளிக்கு ஏற்றதான காலணிகள் இதில் உள்ளன. விண்வெளியில் வெற்றிட பகுதிக்கு ஏற்றாற்போன்ற உபகரணங்கள் இதில் உள்ளன. இந்த புதிய இசெட்-2 விண்வெளி ஆடை வருகிற நவம்பரில் சோதனை செய்யப்படும். நீண்ட நாட்கள் தாங்கும் தன்மை, இயங்கு தன்மை மற்றும் விண்வெளியில் இருப்பது போன்ற தளத்தில் வெற்றிட அறைகளில் பிற நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சோதனை மேற்கொள்ளப்படும்.
செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்று பாறைகள் உள்ள பகுதிகளில் மற்றும் பயிற்சி வீரர்களுக்கு விண்வெளியில் நடப்பதற்கு உரிய சோதனை ஆகியவை நடத்தப்படும். இந்த உடையில் உள்ள சில குறைபாடுகள் என்றால், இதன் உபகரணங்கள் மற்றும் வடிவமைப்பு பொருட்கள் விண்வெளியில் நடக்கும் வீரர்கள் அதிக வெப்பநிலை, தீங்கு விளைவிக்கும் கதிரியக்கம் மற்றும் விண்வெளியில் சிறிய எரிகற்கள் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படியான சிறப்பம்சங்கள் இதில் இல்லை.
எனினும், இவை அனைத்தும் தற்பொழுது தேவையான ஒன்று இல்லை என நாசா அறிவித்துள்ளது.
இந்த இசெட் ரக ஆடைகள் சர்வதேச விண்வெளி மையத்தை தாண்டி செல்லும் பயணத்திற்கு ஏற்றாற்போன்று மேம்பட்ட மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு நாசாவின் நவீன ஆய்வு அமைப்பு பிரிவு திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த இசெட்-2 ரக வடிவம் ஆனது பிரெடரிகா, டெலாவேர் விண்வெளி ஆடை வடிவமைப்பாளர்களான ஐ.எல்.சி. டோவர் மற்றும் பிலடெல்பியா பல்கலை கழகம் ஆகியோரோடு ஒரு பகுதியாக இணைந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். மற்ற இரு வடிவங்கள் வருங்காலத்தில் அணியும் ஆடை வடிவத்திற்கு ஏற்றாற்போன்று மற்றும் இயற்கைக்கு ஏற்றாற் போன்று உருவாக்கப்பட்டவை ஆகும்.

இனி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தலாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒளி உணர்வுகள் மூலம் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானியான கார்ல் டீசெரோத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு “ஆப்டோஜெனிடிக்ஸ்” என்ற தனது தொழில்நுட்பத்தின் மூலம் ஒளி உணர்வுகளை கொண்டு மூளை செல்களின் செயல்பாடுகளை நிறுத்துவது எப்படி என கண்டுபிடித்தார்.
இதை அடிப்படையாக கொண்டு உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் மூளை செல்கள், இதயத்தின் செல்கள் மற்றும் ஸ்டெம் செல்கள் குறித்து ஆய்வு செய்து வந்தனர். எனினும் ஒளி உணர் புரதங்களை கொண்டு செல்களை ஆன் செய்வதில் வெற்றிபெற முடிந்ததே தவிர செல்களை ஆப் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது டீசெரோத்தின் குழு ஒளி உணர் புரதங்களை கொண்டு மூளையின் செல்களை அணைக்கும் வகையில் முன்னைக் காட்டிலும் முன்னேற்றம் தரும் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், மூளை சுற்றுகள் எப்படி நடக்கின்றன, சிந்திக்கின்றன மற்றும் எப்படி உணர்ச்சிவயப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று மனித வளத்திற்கான தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவரான தாமஸ் இன்செல் கூறியுள்ளார் இந்த புதிய தொழில்நுட்பம் மூளை சம்பந்தமான சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

செல்ல நாய் உங்களை நக்குவதற்கான காரணம் தெரியுமா?

வீட்டில் செல்லப்பிராணிகள் என்றாலே ஏராளமானவர்கள் வீட்டில் அதிகமாக வளர்க்கப்படுவது நாய் தான். ஏனெனில் நாய்கள் நல்ல நன்றியுடன் நடப்பதுடன், நல்ல துணையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட நாயை வளர்க்கும் போது, நாய்க்கு இருக்கும் ஒரு பழக்கம் நம்மைக் கண்டவுடன் ஓடி வருவது, நம்மை நக்குவது. இந்த செல்லநாய்கள் ஏன் நக்குகிறது என்று தெரியுமா?
* குட்டி நாய்கள் பசிக்கும் போது, அதை வெளிப்படுத்துவதற்கு நக்க ஆரம்பிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை நக்க ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.
* நாய்கள் கூட மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நக்க ஆரம்பிக்கும்.
* மனிதனின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நக்குகின்றன.
* சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை நக்குவதன் மூலம் வெளிப்படுத்தும். உதாரணமாக, நீங்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நுழைந்தால், உங்கள் நாயானது ஓடி வந்து, உங்களை நக்க ஆரம்பிக்கும்.
ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை நக்குவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
* நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நக்கிக் கொள்ளும்.
ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொள்ளும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும் போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும்.
எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நக்க ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்

மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து ஆப் ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும் சார்ஜ் செய்ய மின் வசதி இருக்கும் இடத்தை தேடி ஓடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கையில் பிடித்தபடியே சார்ஜ் செய்ய முடியும். 

அதற்கான புதிய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நானோ டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் கரோல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். 

‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய கார்பன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும் புதிய வைரஸ்

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோகிராம்கள் இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதை பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ், பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கணனியில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றிற்கு இடையே புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஷமூன்(Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.

செக்யூலர்ட்(Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கணனி ஒன்றினை இணையம் வழியே கைப்பற்றுகிறது.

பிறகு அங்கிருந்து கொண்டு நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கணனியில் உள்ள கோப்புகளை திருத்தி எழுதுகிறது.

அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும்(MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கணனியை இயக்கவே முடியாது.

செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.

2010ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.

இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கணனி பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.

எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.

தாங்கள் கைப்பற்றிய கணனியிலிருந்து பயனர் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்குகள் அவை குறித்த தகவல்களை கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.

மேலும் கைப்பற்றிய கணனியை தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.

ஆனால் இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

கம்ப்யூட்டர் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவி : புதிய கண்டுபிடிப்பு

மூவாயிரத்து ஐநூறு ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்து பேராசிரியர். இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம். இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது: வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.

பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை அதிகம் என்பதால் கட்டணமும் அதிகம் வசூலிக்கிறார்கள். சிம்பிளாக நாமே ஒரு ஸ்கேனர் தயாரித்தால் என்ன என்ற எண்ணம், என் மனைவி முதன்முதலாக கர்ப்பமானபோது உதித்தது. ஒலி அலைகள் தொடர்பான சோனார் துறையில் எனக்கு இருந்த அறிவும் அனுபவமும் கைகொடுத்தது. உடனடியாக அசெம்பிள் செய்து மினி ஸ்கேனரை உருவாக்கினேன். அதன் உதவியுடன் குழந்தையை ஸ்கேன் செய்து நானும் மனைவியும் டிவி திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.

சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து மலிவு விலை ஸ்கேனரை உருவாக்கியுள்ளேன். இதை தயாரிக்க அதிகபட்சம் ரூ.3,500தான் செலவானது. கம்ப்யூட்டர் மவுஸ் சைஸ் மட்டுமே உள்ளது. யுஎஸ்பி போர்ட் மூலம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இணைத்தால் குழந்தையின் அசைவை ஸ்கிரீனில் பார்க்கலாம். குழந்தையின் பொசிஷன் தெளிவாக தெரிகிறது. ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக இல்லை. அதிக விலை ஸ்கேனர் கருவிக்கு நிகராக இதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு ஜெப் நீஷம் கூறினார்.

உலகின் முதல் ரோபோ நீச்சல் வீரன் உருவாக்கம்..!

மனிதர்கள் செய்யும் எல்லாவற்றையும் ரோபோ செய்யும்போது நீச்சலடிக்கக் கூடாதா? எனவேதான் டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொடோமு நகஷிமா தலைமையிலான குழுவினர் உலகின் முதல் ரோபோ நீச்சல் வீரனை உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘ஸ்வுமனாய்டு’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். குட்டியாக, அதிக எடை இல்லாத ஒரு ரோபோவை தெப்பம் போல மிதக்க விட்டு நீச்சலடிக்க வைப்பது ரொம்பவே சுலபம்தான். ஆனால், மனிதனைப் போலவே உயரம், எடை போன்றவற்றைக் கொண்டிருக்கும் ஒரு ரோபோவை நீச்சலடிக்க வைப்பது மிகப் பெரும் கஷ்டம். அதைத்தான் செய்து காட்டியிருக்கிறது இந்த ஜப்பானிய ரோபோ.

3டி ஸ்கேனர் கொண்டு ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பைப் போலவே அச்சு அசலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ மனிதனைப் போலவே கைகளை வீசி நீந்தும். மனிதர்கள் போடும் பின் நீச்சல், பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் என எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கும். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமல்லாமல், நீச்சல் தொடர்பான ஆராய்ச்சிக்கும் இந்த ‘ஸ்வுமனாய்டு’ உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளில் பாதுகாப்புப் பணி, மற்றும் ரோந்துப் பணிகளிலும் இந்த ரோபோவை ஈடுபடுத்தலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

ரோந்துப் பணிகளில் இருக்கும் நீச்சல் வீரர்களை ஜி.பி.ஆர்.எஸ் பொருத்தி கண்காணிப்பதும், கேமராக்கள் பொருத்தி செயல்பாடுகளைத் துல்லியமாக கணிப்பதும் சிரமம். ஆனால், இந்த ரோபோவில் இது சுலபமாக சாத்தியமாகும். நீச்சல் வேகம் உட்பட பல்வேறு இயக்கங்களை துல்லியமாகக் கணிக்கவும் உதவியாக அமையும். உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற சாதனை படைத்தவரைப் போல மூன்று மடங்கு வேகத்தில் நீந்தும் திறன் படைத்ததாம் இந்த ‘ஸ்வுமனாய்டு’. அடுத்த ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்த ரோபோவை அனுமதித்தால் ஏராளமான தங்கப் பதக்கங்களை அள்ளி, அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் படைத் திருக்கும் உலக சாதனைகளை முறியடிப்பது நிச்சயம்.
prince



















திருமந்திரம்

திருமந்திரம்.................
சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே. 7
சிவன் திருப் பெயரை எண்ணியிருந்தேன்! சிவனது திருநாமங்களை ஓதி சகஸ்ரதளத்தில் அம்மையப் பனை வழிபட்டு சிவமாகிய அறிவின் நிழலில் சேர்ந்திருந் தேன் என்கிறார் திருமூலர்.


அந்திவண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்திவண்ணா முதல்வா பரனே என்று
வந்திவ் வண்ணன் எம் மனம்புகுந் தானே. 46
வணங்குபவர் மனம் புகுந்தான்! அந்தி வண்ணன், அரன், சிவம் என உருவமாக வழிபட்டாலும், முந்திவண்ணன்,முதல்வன், பரன் என அருவமாக வழிபட்டாலும், எவ்வண்ணம் வழிபட்டாலும் அவ்வண்ணம் வழிபடுபவர் மனம் புகுந்து அருளுபவன் சிவன்.

சிலந்தி கடித்தால்


அவசரமான எச்சரிக்கை.... பகிருங்கள்
சிலந்தி கடித்தால்
சிலந்தி கடித்தால் or ஒரு நாள் பாவித்த தண்ணீர் கேத்தலை அடுத்த நாள் பாவிக்க வேண்டாம் நன்றாக கழுவி பாவித்து கொள்ளிங்கள் (கீழே படிக்கவும்) இப்படி நடந்தால் சிலர் கணக்கெடுப்பது இல்லை கவனஈனமாய் இருக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுங்கள் இதோ சிலந்தி கடித்த ஒருவரின் கைகளை முடிந்தால் ஒருவரயவது பயன்பெற செய்ய share செய்யுங்கள்.





Volkswagen Beetle sedan (my favourite car)