Wednesday, March 25, 2015

பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் தேன் மற்றும் லவங்கம் …!

பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் தேன் மற்றும் லவங்கம் …!

10985531_901253446591652_4983046582836713915_nதேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருளாகும். இது தான் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் பதிலாக இருக்கும். வெகு சிலருக்கே அதையும் மீறி அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் சேரும் போது நீங்கள் நினைத்ததை விட இன்னும் பல உடல்நல பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா? உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க… பொதுவாக உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க தேன் பயன்படும் என தான் பலரும் நினைக்கின்றனர். இது போக சர்க்கரைக்கு பதில் அதனை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் தேனும் லவங்கப்பட்டையும் சேரும் போது சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து வழியும் இதனை பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தேன் மற்றும் லவங்கப்பட்டையில் உள்ள குணப்படுத்தும் குணங்கள் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.
லவங்கப்பட்டை மற்றும் தேன் சாப்பிடும் முறை
உங்களுக்கு தேவையானது எல்லாம் லவங்கப்பட்டை, தேன் மற்றும் தண்ணீர் மட்டுமே. 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இதன் செய்முறை மிகவும் சுலபமானது. இந்த கலவை சமமாகும் வரை லேசான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை ஆற வைத்து, வெதுவெதுப்பாக குடிக்கவும். பதனிடப்படாத தேனையும், நற்பதமான லவங்கப்பட்டை பொடிக்கு லவங்கப்பட்டை குச்சிகளை அரைக்கவும் பரிந்துரைக்கிறோம்.
கீல்வாதம்
தினமும் காலையிலும் இரவிலும், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சின்ன டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெந்நீரை குடிக்கவும். இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், தீவிரமான கீல்வாதத்தை குணப்படுத்தலாம்.
சிறுநீர்ப்பை தொற்றுக்கள்
ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.
கொலஸ்ட்ரால்
இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை 1 கப் தேநீரில் கலந்து குடித்தால், இரண்டு மணிநேரத்திற்குள், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு 10 சதவீதம் குறையும்.
சளி
ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான தேனை, 1/4 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் கலந்து மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் தீவிரமான இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தி, சைனஸை நீக்கும்.
இதய நோய்கள்
தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதனை கோதுமையால் செய்யப்பட ரொட்டியின் மீது தடவி தினமும் காலையில் உட்கொண்டால், தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். இதனால் நெஞ்சு வலி ஏற்படாமல் தடுக்கும்.
வயிற்று கோளாறு
வயிற்று வலியை குணப்படுத்தும். மேலும் வயிற்று அல்சரை அதன் வேரிலிருந்து நீக்கி விடும்.
வாய்வு
லவங்கப்பட்டை பொடியுடன் தேனை எடுத்துக் கொண்டால், வாய்வு தொல்லையில் இருந்து உங்கள் வயிறு நிவாரணம் பெறும்.
நோய் எதிர்ப்பு அமைப்பு
தேனையும் லவங்கப்பட்டை பொடியையும் தினசரி உட்கொண்டு வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவடைந்து, பாக்டீரியா மற்றும் நச்சுயிர்களில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்கப்படும்.
செரிமானமின்மை
2 டீஸ்பூன் தேனில் தூவப்பட்ட லவங்கப்பட்டை பொடியை தினமும் உணவிற்கு முன் உட்கொண்டால், அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் மிக அதிகமான உணவையும் கூட செரிக்க வைக்கும்.
இன்ஃபுளுவென்சா
இன்ஃபுளுவென்சா கிருமிகளை கொல்லும் இயற்கையான பொருட்கள் தேனில் உள்ளது. இது நோயாளிகளை ஃப்ளூ தாக்காமல் பாதுகாக்கும்.
முதுமை பிரச்சனைகள்
4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை போடி மற்றும் 3 கப் தண்ணீரை ஒன்றாக கலந்து, அதனை கொதிக்க வைத்து, தேநீர் போல் தயார் செய்து கொள்ளவும். இதனை தினமும் பருகி வந்தால் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
பருக்கள்
3 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை தூங்க செல்வதற்கு முன் பருக்களின் மீது தடவவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால் வேரிலிருந்தே பருக்கள் நீங்கும்.
உடல் எடை குறைப்பு
ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்த தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் வெறும் வயிற்றிலும், இரவு தூங்க செலவற்கு முன்பும் குடித்து வந்தால், உடலில் கொழுப்பு குவியாமல் தடுக்கப்படும்.
சரும தொற்றுக்கள்
பாதிக்கப்பட்ட இடங்களில் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியைத் தடவி வந்தால் சிரங்கு, படர்தாமரை மற்றும் அனைத்து விதமான சரும தொற்றுக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சோர்வு
தேனில் உள்ள சர்க்கரை உடல் வலுவடைவதற்கு இடைஞ்சலாக இல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து, அதன் மீது கொஞ்சம் லவங்கப்பட்டை பொடியை தூவி, காலையில் பல் துலக்கிய பின்னும், மதியமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடலின் உற்சாகம் அதிகரிக்கும்.
புற்றுநோய்
1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை ஒரு மாத காலத்திற்கு, தினமும் 3 வேளை எடுத்துக் கொண்டால், வயிறு மற்றும் எலும்பில் முற்றிய புற்றுநோய் சரியாகும்.
காது கேளாமை
தினமும் காலையிலும் இரவிலும் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சரிசமமான அளவில் எடுத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் காது கேட்க உதவிடும்.

ஆண்களின் டாப் 8 பிரச்னைகள்! ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு!

ஆண்களின் டாப் 8 பிரச்னைகள்! ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு!

doctor_male_patien_1368608cஉடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும் ஆண்களுக்கு ஏன் இந்த நிலை? உடல்ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?
ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம் வகையையும் ஆண்கள் எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம் வகையையும் சேர்ந்தவர்கள். ஒரே இன குரோமோசோம் வகையைக் கொண்ட பெண்கள், இயற்கையிலேயே ஆண்களைவிட அதிக வலிமை உடையவர்கள். இதனால்தான், ஆண்களை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. தவிர, மருத்துவ, சமூகரீதியான காரணங்களும் உண்டு. மன நலம் சார்ந்த பிரச்னைகளும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். உலக அளவில் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம் ஆண்களே!
பதற்றமடையவைக்கும் பருவ வயது!
ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர். ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால், பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர்.
இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது. இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி.
பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள். அழகான பெண்களைப் பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத்தளம், திரைப் படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும். இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சியுறும்.
சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறுவதில் வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.
இதை எப்படி சரிப்படுத்துவது, கடந்து வருவது, இயல்பாக எடுத்துக்கொள்வது என்பது பற்றிய முறையான பாலியல் கல்வி தேவை. தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60 – 65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின்போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.
ஆண்ட்ரோபாஸ் பருவம்!
பெண்களுக்கு மெனோபாஸ் போல 40 வயதை அடையும்போது ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக முக்கியமான காலகட்டம் இது. தனக்கு வயதாகிறதே என்ற கவலையோடு, குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நேரம் இது. தன் பேச்சைக் கேட்டுத்தான் மனைவி, குழந்தைகள் செயல்படவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இந்த வயதில் அனைத்து ஆண்களுக்கும், மீண்டும் பாலியல் ஆசைகள் துளிர்விடும். இது இயல்பானது. ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ என மனைவி ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில், பக்குவமடையாத ஆண்களுக்குக் கோபம் வரும். பலர் தங்களது ஆசைகளை அடக்கினாலும், அது கோபமாக மாறி, வீட்டில் உள்ளவர்கள் மேல் பாயும். இந்த வயது ஆண்களுக்கு அறிவுரைகள் கேட்கப் பிடிக்காது. காதல், இரண்டாம் திருமணம் என ஆண்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்வது இந்தக் காலகட்டத்தில்தான்.
இளம் வயதில் இருந்தே கொடுக்கப்படும் முறையான உடல், மன நலப் புரிதல்கள்தான் இந்தப் பிரச்னைகளை கடந்துவர உதவும். நாற்பதுகளில் வரும் பல்வேறு நோய்களுக்கு, மன அழுத்தம் முதல் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு, மனதைப் பக்குவப் படுத்தினால் நாற்பது வயதிலும் நலமாக வாழலாம்.
மனநலப் பிரச்னையா… பயப்பட வேண்டாம்!
ஆண் என்றால் அழக் கூடாது, வீரமாக இருக்க வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் எனத் தவறான எண்ணம் இருப்பதால், ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை. உணர்ச்சிகளைச் சரியான விதத்தில் வெளிப்படுத்தாததுகூட மன அழுத்தத்துக்கு காரணமாகிவிடும். இதனால் வீடு மற்றும் ஆபீஸில் டென்ஷனுடன் இருப்பார்கள். மரியாதை, அங்கீகாரம், பணம், புகழ் என ஏதாவது ஒன்றைக் காரணமாகவைத்து, மனதைக் குழப்பிக்கொள்வார்கள். யாரிடமும் தன் பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லாமல், மனதுக்குள் மறுகுவார்கள். இதன் காரணமாக கிரிமினல் பழக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகின்றன.
மன அழுத்தம், கோபம் காரணமாகப் பெரும்பாலான ஆண்கள் நிம்மதியாக இல்லை. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வெளிப்படையான பகிர்தல் இல்லாததே ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வருவதற்கு காரணம். தியானம், யோகா என மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே ரத்த அழுத்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
போதையா? ‘நோ’!
புகை பிடித்தல், மது, கஞ்சா, புகையிலை மற்றும் பான்பராக் மெல்லுதல் எனப் போதைப் பழக்கத்தில் எதையாவது ஒன்றைக்கூட கற்றுக்கொள்ளாத இளைஞர்களைக் காண்பது இன்று அரிது. இதனால் கல்லீரல் சிதைவு, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு, நரம்புத்தளர்ச்சி, இதயநோய் என, வாழ ஆசைப்படும் காலத்தில் வலுக்கட்டாயமாக மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்கின்றன நோய்கள். காதல் தோல்வி, அலுவலக அவமானங்கள், உடல் வலி என அனைத்துக்கும் மதுவை நாடினால் பிரச்னையில் இருந்து விடுபட முடியும் என்றொரு தவறான நம்பிக்கை பல ஆண்களிடம் இருக்கிறது. மது அருந்தாதவர்களைக் இளக்காரமாகப் பார்ப்பதும், அவர்களை அந்நியப்படுத்துவதுமான சம்பவங்கள் இன்று பள்ளி, கல்லூரி இளைஞர்களிடம்கூட காண முடிகிறது. இதனால், சில ஆண்கள் தனக்கு நாட்டமில்லை என்றாலும்கூட, மது அருந்தினால் மட்டுமே சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற அச்சத்தில் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்களில் 35 சதவிகிதம் பேருக்கு இளம் வயதிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மது, உடல் நலத்தை மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கும். மேலும், மது அருந்துபவர்களின் விந்தணுக்கள் வீரியம் இழப்பதால், இல்லறத்திலும் பிரச்னை ஏற்படுகிறது.
பக்கவாதம்!
மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதன் காரணமாக பக்கவாதம் வருகிறது. இந்த நோயும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. புகைபிடிப்பது, உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேருவது இவையே பக்கவாதம் வர காரணங்கள். இது பரம்பரையாக அடுத்த தலைமுறையையும் தாக்கலாம். நம்முடைய மதுப் பழக்கத்துக்கு, அடுத்த தலைமுறைகளும் பலியாக வேண்டுமா?
ஹார்ட் அட்டாக் எண்ணிக்கை கேட்டாலே ஹார்ட் அட்டாக் வரும்!
உலக அளவில் ஆண்கள் மரணத்துக்கு அதிகம் காரணமாய் இருப்பது மாரடைப்புதான். புகைபிடிப்பது, மது அருந்துவது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகம் எடுத்துக்கொள்வது, உடல் எடையை கவனிக்காமல் இருப்பது, சர்க்கரையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்றவையே மாரடைப்புக்கு முக்கியமான காரணங்கள்.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பதன் காரணமாக, மாதவிடாய் நிற்கும் வரை இதய நோய்கள் வருவது இல்லை. ரத்தக்குழாயில் கொழுப்பு சேருவதை ஈஸ்ட்ரோஜென் தடுக்கிறது. ஆனால் ஆண்களுக்கு ஹார்மோன்கள்ரீதியாக இயற்கையான பாதுகாப்பு கிடையாது. மேலும், உலகம் முழுவதும் 5 சதவிகிதம் ஆண்கள் எவ்விதத் தவறான பழக்கவழக்கங்கள் இல்லையென்றாலும் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள்.
‘டயட்’ கடைப்பிடி… டயாபடீஸை விரட்டு!
சர்க்கரை நோயிலும் ஆண்களுக்கே முதலிடம். சிறுவயதில் இருந்தே முறையான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், போதைப் பழக்கம் காரணமாக இன்றைக்கு 25 வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது. ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். சர்க்கரை நோயைக் குணமாக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும். எனவே சர்க்கரை நோய் குறித்த விழிப்பு உணர்வு ஆண்களுக்கு அவசியம் தேவை.
‘‘ஆம்பிளைப் பிள்ளை நல்லா சாப்பிடட்டும்’’ என சிறு வயதில் கொழுப்புச்சத்துள்ள உணவை அதிக அளவில் ஊட்டி வளர்க்கின்றனர். இதனால் உடல்பருமன் அதிகமாகி பின்னால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
60 வயதைத் தாண்டினால் ப்ராஸ்டேட் கேன்சர் அபாயம்!
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான ப்ராஸ்டேட், சிறுநீர் பைக்குக் கீழே அமைந்துள்ளது. வயது அதிகரிக்கும்போது இது பெரிதாகி, சிறுநீர் செல்லும் குழாயை அடைத்துப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதேபோல ப்ராஸ்டேட் புற்றுநோயும் ஏற்படலாம். இந்தியாவில் ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் இது பற்றிய போதிய விழிப்பு உணர்வு இல்லாததாலும், மற்றவர்களிடம் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டும் மருத்துவமனைக்கு வருவதில்லை.
இந்த புற்றுநோய் ஏன் வருகிறது எனத் தெளிவான முடிவுகள் இல்லை. சில ஆய்வுகள் வைட்டமின்-டி குறைபாடு காரணமாக அதிகப்படியான கால்சியம், உடலில் தங்குவதால் இந்த நோய் வரலாம் எனத் தெரிவிக்கின்றன. சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகம் இருத்தல் போன்றவை புராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள எந்த வழியும் கிடையாது. சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பது போல தோன்றினால், மருத்துவரை சந்தித்து பி.எஸ்.ஏ (PSA – Prostate Specific Antigen) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதன் முடிவுகளை வைத்து பிறகு, பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்தி புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறிய முடியும்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு, இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிடிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப். ஹார்மோன் சென்சிடிவ் டைப்பில் விரைகளை நீக்கி ஆண்களுக்குச் சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை 15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில், சிகிச்சைகள் அளித்தாலும் பலனளிக்காது. அவர்களுக்கு வாழ்நாள் அளவு குறைவு என்பது வருத்தத்துக்குரியது. புகையிலை காரணமாக சுவாசப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஃபாஸ்ட் புட் உணவுகளால் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் வருகிறது. மது அருந்துவதால் கல்லீரல், உணவுக்குழாய் புற்றுநோய்கள் ஆண்களையே அதிகம் தாக்குகின்றன.
புதிரான விஷயங்களைப் பற்றிய புரிதல் அவசியம்!
ஆண்கள், பெண்கள் இருவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
பீட்சா, பர்கர், சாட் அயிட்டங்கள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தேர்ச்சியடைந்து, தினமும் பயிற்சி எடுத்துவந்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம்மும், பிரச்னைகளை பாசிட்டிவாக அணுகுவதற்கும் கற்றுக்கொள்வதன் மூலமும் மனரீதியான பாதிப்பிலிருந்து மீளலாம்.
பாலியல் கல்வி, அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் உறுப்புகள், மாதவிடாய் பிரச்னைகள், பெண்களிடம் பழகும் விதம், சக நண்பர்களாக பாவிக்கும் பக்குவம் இவற்றை, சிறுவயதில் இருந்தே ஆண்களுக்கு கற்றுத்தருவது அவசியம்.
ஆண்களுக்குப் பாலியல் கல்வி பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லித்தருவதைக் காட்டிலும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தனி மனநல நிபுணரை நிர்ணயிக்க வேண்டும். .
நாற்பதைக் கடக்கையில், என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை எதிர்கொள்ள நாம் எவ்வாறு தயார் ஆக வேண்டும், அவற்றை எப்படி எதிர்கொண்டு, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற புரிதல் ஆண்களுக்கு அவசியம்.
மதுவை விரும்பும் நேரத்தில் மனதைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று மதுவில் இருந்து விடுபட வேண்டும்.
ஓர் ஆணின் ஆண்தன்மை என்பது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே அல்ல என்பதைப் புரியவைத்து, திருமணத்துக்கு முன்பு, தாம்பத்யம் குறித்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.

ஒரே வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ உடல் எடையை குறைக்கும் ஜிஎம் டயட் (GM Diet) வழிமுறை!

ஒரே வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ உடல் எடையை குறைக்கும் ஜிஎம் டயட் (GM Diet) வழிமுறை!

gm dietஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த (General Motors: Weight Loss Diet Program) பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் வழிமுறை தற்போது உலகம் முழுவதும் பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” நிறுவனம் அங்கீகரித்துள்ள இம்முறை மூலம் ஒரு வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களும் இம்முறையை பயன்படுத்தியே உடல் எடையை குறைத்துள்ளனர்.
எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.
சரி இனி அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்:-
நாள் 1
நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் முக்கியமாக வாழைப்பழத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம். குறிப்பாக தர்பூசணி சற்று அதிகமாக எடுத்துகொள்வது நல்லது.
நாள் 2
இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கை பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 3
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
நாள் 4
நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதிகபட்சமாக எட்டு வாழை பழங்களும் மூன்று கிளாஸ் பாலும் உட்கொள்வது நல்ல பயனைத் தரும். இரவு வேளையில் அளவாக வெஜிடபிள் சூப் எடுத்துக்கொள்ளலாம்.
நாள் 5
இன்று அசைவ நாள். நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் அளவாக பீப் (மாட்டு கறி) மற்றும் ஒரு பெரிய தக்காளி உட்கொள்ள வேண்டும்.
நாள் 6
ஆறாம் நாளில் ஒரு கப் சாதம் உட்கொள்ளலாம். இதுதவிர அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மாட்டுக்கறியையும் (பீப்) சற்று அதிகமாகவே சாப்பிடலாம். ஆறாம் நாள் இறுதியில் நிச்சயம் உங்கள் உடல் எடையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
நாள் 7
இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்:
ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன்படும்.
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ! எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் 

வாட்ஸ்அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வாட்ஸ்அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
whatsapp-voice-calling
இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும். இதனால் அதில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாகவே இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே பேசும் வசதியை கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது வாட்ஸ்அப்.
இதனால் இந்த வசதி கிடைக்காத பலர் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்நிலையில் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் விதமாக ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப். இந்த அப்ஸ்-ஐ கூகுள் ப்ளேஸ்டோர் (2.11.528) மற்றும் வாட்ஸ்அப் (2.11.531) தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப் பேசும் வசதியை பயன்படுத்தி வரும் ஒருவர், உங்களுக்கு கால் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை நீங்களும் பயன்படுத்த தொடங்கலாம்.

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

Whatsappவாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது. இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..
வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது.
2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது.
தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர்.
தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப்.
வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இல்லை.
வாட்ஸ்ஆப் நிறுவனம் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு செலவு செய்ததே கிடையாது

உங்களது ஆன்டிராய்டு போன்களில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி..?

உங்களது ஆன்டிராய்டு போன்களில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி..?

ஸ்மார்ட்போனில் தினந்தோரும் பல புகைப்படங்களை எடுக்கின்றீர்கள் அவற்றை கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று பாருங்கள்.
theandroidsoul.com-lego-movie-android-app
செயலி
ஆன்டிராய்டு ஸ்மாரப்ட்போனில் பிக்பேக் “PicPac” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
புகைப்படம்
இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்களை உங்களது கருவியில் இருந்தும் எடுத்து கொள்ளலாம் அல்லது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் இருந்தும் பயன்படுத்தலாம்.
ஃப்ரேம்
தேவையான புகைப்படங்களுக்கு ஏற்ற நேரத்தை செட் செய்ய வேண்டும், ஒரு புகைப்படத்திற்கு அதிக பட்சம் 10 நொடிகள் வரை செட் செய்ய முடியும்.
நெக்ஸ்ட்
அடுத்து செயலியின் எடிட்டிங் ஸ்கிரீனில் இருக்கும் நெக்ஸ்ட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு பெயர் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ள முடியும்.
க்ரியேட்
அடுத்து க்ரியேட் வீடியோ என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
நேரம்
புகைப்படங்களுக்கு ஏற்ற நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க தான் வேண்டும்.
ஆடியோ
அடுத்து வீடியோவிற்கு ஆடியோ சேர்க்க வேண்டும், ஆடியோவை ரெக்கார்டு செய்யலாம், அல்லது கருவியில் இருப்பதை பயன்படுத்தலாம் அல்லது சவுண்டு க்ளவுடில் இருந்தும் பயன்படுத்தலாம்.
ஆன்லைன்
வீடியோவில் ஆடியோ சேர்க்கப்பட்ட பின் அதை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பகிரந்து கொள்ளலாம்.
மெனு
அடுத்து செயலியின் ஹோம் மெனு சென்று அடுத்த வீடியோவை பதிவு செய்யலாம்.
போல்டர்
பதிவு செய்த வீடியோக்களை செயலியின் டூல் பாரில் இருக்கும் போல்டரில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

ஃபேஸ்புக் இலவச இணையதள வசதியின் எதிரொலி: குறைகிறது இணையதள கட்டணங்கள்!

ஃபேஸ்புக் இலவச இணையதள வசதியின் எதிரொலி: குறைகிறது இணையதள கட்டணங்கள்!

free-internet-facebookரிலையன்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து செல்ஃபோனில் இலவச இணைய தள வசதியை அறிவித்துள்ளதால், போட்டி காரணமாக இணைய தள கட்டணத்தை குறைக்க மற்ற தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அளிக்கவுள்ள இந்த சேவையை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
தொடக்கத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போட்டியை சமாளிக்க இணைய தள இணைப்புக்கான டேட்டா கட்டணத்தை மற்ற தொலைபேசி நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என சந்தை ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதோடு குறிப்பிட்ட சில இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்தும் வசதியையும் அறிவிக்க தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட்!

விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட்!

Windows_10அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விண்டோஸ் 10-ன் மாதிரி பதிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும், விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கணனி மற்றும் செல்பேசிக்கான இந்த இயங்குதளத்தின் மாதிரி தோற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் இயங்குதளமானது பெரும்பாலும், பணம் செலுத்தாமல் திருட்டு மென்பொருட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு தெரியுமா ??...

 

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை...

அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...

நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை...

15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது...

இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை....

license இல்லையா vehicle papers இல்லையா...

பணத்த எடுனு போலிஸ் சொன்னா...

நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி
செல்லான்வாங்கிக்கோங்க..

நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே...
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.