Sunday, June 12, 2016

அனைத்தையும் பெற கணபதி மந்திரம்


சுபமந்திரம்

ஓம் கணபதி, அழகு கணபதி, சக்தி கணபதி, 
மஹா கணபதி, வித்தைகள் விளக்கிய கணபதி, பரிபூரண கணபதி, 
கச்சிக் கணபதி, என்னிருளினைப் போக்க சடுதியில் வாவா 
ஒம் ஐயுங் கிலியும் சௌவும் றீயுமென் றுன்றிருவடி சரணங்கணபதி.

முருகன் கணபதியை கனவில் காண சுப மந்திரம்

சுபமந்திரம்

ஹரி ஓம் குருவே ஆமெனு மெழுத்தை அறிவித்தகுருவே வருக
ஆதி விநாயகா ஆணை மாமுகனே பானை வயிரா 
பாசாங் குசதாரா பாலன் முன் வருக 
ஓம்சக்தி முருகா சடாட்சர முருகா 
சரவணத்தில் பிறந்த சதுரகிரி முருகா சடுதியில் வருக 
தெய்வ யானைப்பாகா தேவிவள்ளியின் நாயகா 
சித்ரமயில் வாகனா சித்தர் போகம்
சிறையிலிட்டுப் பிரம்மனை சித்தங்கலக்கிய சத்ரு சம்ஹாரா 
தந்தையின் செவியில் மந்திரமோதிய செந்தூர் சிவசுப்ரமண்ய தேவா வருகவருக ஸ்வாஹ : 

 

துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு மந்திரம்

நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள் நம்மையோ நம் சந்ததிகளையோ ஆட்கொண்டு ஆட்டிபடைக்கும்.  அச்சமயங்களிலும் சரி, அவைகளனுகாதிருக்கவும், விடுதலைப் பெறுவதற்கும் உண்டான " உடற்கட்டு சுபமந்திரம் "  இம் மந்திரத்தை தாமும் தம் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, விபூதி 1 சிட்டிக்கை எடுத்து கீழ்வரும் மந்திரத்தை மும்முறை சொல்லி நெற்றியில் அணிந்து கொண்டு படுக்கைக்கு சென்றால் துஷ்ட சக்திகள் அணுகாது.   

சுபமந்திரம்

ஓம்சக்தி சிவசக்தி சாமுண்டிபரமேஸ்வரி 
ஐயுங்கிலியும் சௌவும் ஆகாயத்தைக் கட்டினேன், 
சௌவுங் கிலியும் ஐயும் பாதாளத்தைக் கட்டினேன், 
எட்டுதிசையும் பதினாறு கோணமும் ஈஸ்வரனைக் கொண்டு கட்டினேன், கண்ணுடன் சிரசைக் கணபதியால் கட்டினேன், கண்டமும் உடலும் கந்தசாமியால் கட்டினேன் 
மற்றவை துஷ்டவை மகாதேவனால் கட்டினேன் 
என் உடலையும் உயிரையும் உன் உயிராய் கட்டினேன் 
என்கட்டே கட்டு என்கட்டு உன் கட்டாக நிற்க சுவாஹ: 

என்று சொல்லவும். இதற்கு பூஜாவிதிமுறைகள் ஏதுமில்லை. ஸ்லோகங்கள் போலவே இதுவ