Thursday, December 11, 2014

உனக்காகவே காத்திருப்பேன்


உன்னை நினைக்கவே கூடாதென்று
மனதைக் கட்டிப்போட்டு
உறுதியெடுத்துக்கொண்டபோதும்
எங்கேயோ ஒன்று
உன்னை நினைவுபடுத்திவிட்டுப்
போகிறது.....!
ஒரு பாடல்...
ஒரு திரைப்படம்
ஒரு தொலைக்காட்சித்தொடர்
இரு காதலர்கள்...
இன்னும் பல.....!
இன்று,
உனக்குப் பிடித்த
ஒரு படம் .....
உன்னை நினைவுபடுத்தி
என்னை அழவைத்தது ....

---------------------------------------------------------------------------------------------


சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,

ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?


அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக் கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்...

துணிகளை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..!


சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர் துணி ,இருந்தும் அதில் தலை துவட்டவே ஆசை...

#அவளின் முந்தானை.!


உன் சட்டையை அணிந்து கொள்ளட்டுமா என்றாள் , அந்த சட்டைக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சம்மதித்தேன்.!!!


கோபத்தில் அவளைத் திட்டியதற்காய் ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன், அன்று முதல் என்னைக் கோபப்படுத்துவதையே வேலையாய் கொண்டிருக்கிறாள்..!!!

 

காதுகள் கூட சுவை உணருமா??...
choo sweet என்று அவள் சொன்னது, காதின் வழிச்சென்று ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றுகிறது.!


அவள் செய்யும் வேளைகளில், அவளுக்கு நான் ஏதாவது உதவி செய்ய நினைத்தால் அந்த வேலையை சப்தமாகச் சொல்வாள்..

#இப்படித்தான் இப்பொது குளிக்கப்போறேன் என்று கத்தினாள் !!!


அதிகம் பேசிவிட்ட களைப்பில் ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்...

#உறக்கம் !


கணவன் மனைவி உறவின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்.. அன்பு பெருகும்.. 


--------------------------------------------------------------------------------------------------------------


First ல எனக்கு நீ தான் டா call பண்ணுவ...

நான் பண்ணாலும் cut பண்ணிட்டு நீ
கூப்பிடுவ

இப்போ நான் பண்ண cut மட்டும் தான் பண்ற

உனக்கு ரொம்ப பிடிச்சவ இந்த
உலகத்துலேயே "நீ"
தான்டி ன்னு சொல்லுவியேடா அதெல்லாம்
பொய்யா...

உன் காதல் பொய்யா..
உன் பாசம் வேசமா...

இதெல்லாம்
நெனச்சா அழுகையா வருது டா ...

உனக்கு பிடிச்ச நான் பிடிக்காம
போனதுக்கு காரணம் என்ன டா

உனக்கு அழகியா நான் தெரிஞ்ச
கண்ணுக்கு

பேரழகியா இன்னொருத்தி தெரியுராலா டா....

--------------------------------------------------------------------------------------------------------------

காதலித்துப்பார் - இதில் ஒன்றேனும்
நடக்கும்..!

அதிகாலையில்
உன்னை எழுப்ப
அலாரம் வைத்துவிட்டு,
அலாரத்தை நீ எழுப்புவாய்

நடைபாதை சாக்கடைநாற்றம்
உன் நாசியைத் துளைக்காது

கோவில்மணி ஓசையில்
சிறகைக்கும் பறவைகளை
ரசிப்பாய்

மொட்டை வெயிலில்,
மொட்டைமாடியில்
கவிதைகள் பிறக்கும்

மழையையும் ரசிப்பாய்
உச்சி வெயிலையும் ரசிப்பாய்

தங்கையிடம் அத்தனையும்
விட்டுக்கொடுப்பாய்

அம்மாவை அவ்வப்போது
அன்போடு கட்டியணைப்பாய்
சிலமுறை முத்தம் கொடுப்பாய்

என்றுமே கேட்காத
அப்பா சொல்லை
தட்டாமல் கேட்பாய்

அவள் சிணுங்களை
செல்போனில் ரசிக்க,
சில்லறையைச் சேகரிப்பாய்

ஆடைகளைக் களைகையில்
அவனை நினைத்துக்கொள்வாய்
(பெண்களுக்கு மட்டும்)

நீ நாத்திகனானாலும்
ஆத்திகத்தை அவ்வப்போது
ஆதரிப்பாய்

கல்லூரி, அலுவலகம்
செல்லும்முன் - நீ
கடைசியாகப் பார்ப்பது
கண்ணாடியாகத்தான் இருக்கும்

வாடிக்கிடக்கும்
பூச்செடியைக் கண்டால்
வருத்தப்படுவாய்

பூங்காவில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள் - உன்
நண்பர்கள் பட்டியலில்
இடம்பிடிக்கும்
காரணமின்றி சிரிப்பாய்

பெண்களை மதிப்பாய்

கொலுசொலியில் வருவது
சத்தமல்ல.. இசை என்பாய்..

வாலிக்கும்,
வைரமுத்துவிற்குமுள்ள
ரசிகர்களின் எண்ணிக்கையில்
ஒன்று கூடும்

உனது கணினி பதிவிறக்கத்தில்
காதல் படங்களே அதிகமாக இருக்கும்

குட்டி குழந்தைகள் கிடைத்தால்
குட்டி முத்தங்கள் கொடுப்பாய்

மழையில் நனையும் வேளை,
அவள் முந்தானை உன் முகம்
துடைக்கும் கைக்குட்டையாகும்

ஆயிரம்பேர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
காய்கறிச்சந்தையில்,
எங்கோ ஒலிக்கும்
இளையராஜாவின் இசை
உன் செவிமடல்களை வருடும்

ஊர் உறங்கும் வேளையில்...
நத்தைக்கூட்டில் குடியேறி,
சிலந்திவலை ஊஞ்சலில்
அவளோடு உறவாடுவதாய்
கனவு காண்பாய்

அவளோடு இருக்கப் பிடிக்கும்
இல்லை, தனிமையில் கிடந்து
தவிக்கப் பிடிக்கும்

தமிழை கொலைசெய்தேனும்
கவி புனைவாய் - அதில்
அவளது முகம் எப்படியும்
நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும்

சாதி மதங்களுக்கு சமாதிகட்ட
வேண்டுமென்பாய்

அறிவுரைகள் சொல்வாய்.
சுற்றி இருப்போருக்கு
தலை சுற்றும்வரை...

யாவற்றிற்கும் மேலாக..,

அவள் காதலை ஏற்கும்வரை
குடம் குடமாய் குடித்துவிட்டு -
இன்று
குடி குடியைக் கெடுக்குமென்பாய்..

டாஸ்மாக்கை ஊரைவிட்ட
ஒழிக்க வேண்டுமென்பாய்.

இத்தனையும் நடக்கும்...

**அன்பானா காதலி
அழகாக அமையும் பட்சத்தில்..!

Sunday, November 23, 2014

உன்னாலே உயிர் வாழ்கிறேன்


 உன்னாலே உயிர் வாழ்கிறேன்


இசை எனக்கு 
தேவையில்லை 
உன் மார்பில் சாய்கையில் 
கேட்கும் 
இதயத்துடிப்பின் ஓசை 
போதுமடா !!! 






-------------------------------------------------------------------------------------------------------------------


என் தோள்களில் 
நீ சாய்ந்து இருந்தால் 
என் கவலைகள் 
மட்டும் அல்ல
என் கண்ணீரும் 
மறைந்து விடும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உன் சொந்தங்களை 
கை விட்டு விட்டு 
என் கரம் பற்றுகிறாய்
கை விட மாட்டேன் 
உன்னை...
என் உயிரின் 
கடைசி மூச்சு வரையில்..

 ------------------------------------------------------------------------------------------------------------------

காதலில் தோற்றவர்கள் எல்லாம் 
காதலை 
மறந்து வாழவில்லை. . 
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு 
வாழ்கிறார்கள். !!!
 ------------------------------------------------------------------------------------------------------------------



உண்மையாக நேசிப்பவர்களை
ஒரு நிமிடம் கண்களை
மூடி நினைக்கும்போது
பிரிவின் ஏக்கம் விழி
ஓரம் கசிகிற கண்ணீர்
துளிகளில் தெரியும் ! 

 ---------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்களை காதலித்து 
ஏமாற்றும் பெண்கள் , 
இன்னொருவனை
திருமணம் செய்த பின் தான்
உண்மை காதலை 
உணர்கிறார்கள்.....

சில பெண்களுக்கு மட்டும

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------

எப்படியடா உன்னால் 
மட்டும் முடிகிறது 
என்னோடு இருந்த 
நிமிடங்களையும் 
என்னோடு பேசிய 
வார்த்தைகளையும் 
மறந்து விட்டு இருக்க 
என்னால் ஏனோ 
உன்னையும் 
உன் நினைவுகளையும் 
மறக்க முடியவில்லை.

 -----------------------------------------------------------------------------------------------------------------------

சில நாட்கள் 
உன்னோடு பேசாமல் 
இருந்திட முடியும் 
ஆனால் 
சில நொடிகள் 
உன் நினைவுகளை 
மறந்து இருந்திட முடியாது ! 
--------------------------------------------------------------------------------------------------------------------------


இது போதும் எனக்கு
இது போதுமே...!
வேறென்ன வேண்டும்
நீ போதுமே.! 

 ------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னால சிரிக்கும் போதும்
உனக்காக அழும் போதும்
தாண்டா
நான் உன் மேல வெச்சிருக்குற
காதல் புரியுது..
----------------------------------------------------------------------------------------------------------------------


முகமும் பார்க்காமல்
உதடுகள் பேசாமல்
காதுக்கும் கேளாமல்
அன்பானவர்கள் பேசும்
ஒரே மொழி "நினைவுகள்"...

 ---------------------------------------------------------------------------------------------------------------------

உன் கூட இருந்த ஒவ்வொரு நொடியையும் 
மறக்க முடியுமா ????
தினம் தினம் அதையே நெனச்சி 
செத்துட்டு இருக்கேன்டி