Sunday, November 23, 2014

உன்னாலே உயிர் வாழ்கிறேன்


 உன்னாலே உயிர் வாழ்கிறேன்


இசை எனக்கு 
தேவையில்லை 
உன் மார்பில் சாய்கையில் 
கேட்கும் 
இதயத்துடிப்பின் ஓசை 
போதுமடா !!! 






-------------------------------------------------------------------------------------------------------------------


என் தோள்களில் 
நீ சாய்ந்து இருந்தால் 
என் கவலைகள் 
மட்டும் அல்ல
என் கண்ணீரும் 
மறைந்து விடும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

உன் சொந்தங்களை 
கை விட்டு விட்டு 
என் கரம் பற்றுகிறாய்
கை விட மாட்டேன் 
உன்னை...
என் உயிரின் 
கடைசி மூச்சு வரையில்..

 ------------------------------------------------------------------------------------------------------------------

காதலில் தோற்றவர்கள் எல்லாம் 
காதலை 
மறந்து வாழவில்லை. . 
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு 
வாழ்கிறார்கள். !!!
 ------------------------------------------------------------------------------------------------------------------



உண்மையாக நேசிப்பவர்களை
ஒரு நிமிடம் கண்களை
மூடி நினைக்கும்போது
பிரிவின் ஏக்கம் விழி
ஓரம் கசிகிற கண்ணீர்
துளிகளில் தெரியும் ! 

 ---------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்களை காதலித்து 
ஏமாற்றும் பெண்கள் , 
இன்னொருவனை
திருமணம் செய்த பின் தான்
உண்மை காதலை 
உணர்கிறார்கள்.....

சில பெண்களுக்கு மட்டும

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------

எப்படியடா உன்னால் 
மட்டும் முடிகிறது 
என்னோடு இருந்த 
நிமிடங்களையும் 
என்னோடு பேசிய 
வார்த்தைகளையும் 
மறந்து விட்டு இருக்க 
என்னால் ஏனோ 
உன்னையும் 
உன் நினைவுகளையும் 
மறக்க முடியவில்லை.

 -----------------------------------------------------------------------------------------------------------------------

சில நாட்கள் 
உன்னோடு பேசாமல் 
இருந்திட முடியும் 
ஆனால் 
சில நொடிகள் 
உன் நினைவுகளை 
மறந்து இருந்திட முடியாது ! 
--------------------------------------------------------------------------------------------------------------------------


இது போதும் எனக்கு
இது போதுமே...!
வேறென்ன வேண்டும்
நீ போதுமே.! 

 ------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னால சிரிக்கும் போதும்
உனக்காக அழும் போதும்
தாண்டா
நான் உன் மேல வெச்சிருக்குற
காதல் புரியுது..
----------------------------------------------------------------------------------------------------------------------


முகமும் பார்க்காமல்
உதடுகள் பேசாமல்
காதுக்கும் கேளாமல்
அன்பானவர்கள் பேசும்
ஒரே மொழி "நினைவுகள்"...

 ---------------------------------------------------------------------------------------------------------------------

உன் கூட இருந்த ஒவ்வொரு நொடியையும் 
மறக்க முடியுமா ????
தினம் தினம் அதையே நெனச்சி 
செத்துட்டு இருக்கேன்டி



No comments:

Post a Comment