Saturday, November 22, 2014

Kadhal kavithaigal

பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....

----------------------------------------------------------------------------------------------

சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...

----------------------------------------------------------------------------------------------

யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரியாய்..

---------------------------------------------------------------------------------------------------------

எனக்கான உலகமாய் நீ இருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பு
இருந்தது உண்மைதான்
அதுசரி. .
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம். !

----------------------------------------------------------------------------------------------

காதலில் எமாற்றுபவர்க்கு வாழ்நாளில் வசந்தம்
வரவே வராது அது பாவத்தின் சாபம். .
ஏமார்ந்தவர்களுக்கு வசந்தம் வந்தாலும்
சுகம் தராது இது சோகத்தின் தாக்கம். !


------------------------------------------------------------------------------------------------------

சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்
ஆனால். .
உண்மையான அன்பு கிடைக்கும் போது தான்
உன்னையே உனக்கு பிடிக்கும். !


-------------------------------------------------------------------------------------------------------

எப்படியடா உன்னால்
மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை.


--------------------------------------------------------------------------------------------------

முன்பெல்லாம்
என்னுடன் பேசுவதற்கு
ஒவ்வொரு காரணங்களை
உருவாக்கி கொள்வாய்
இப்பொழுதெல்லாம்
என்னுடன் பேசுவதை
தவிர்ப்பதற்காகவே
புது புது காரணங்களை
தேடி கண்டு பிடித்து
விடுகிறாய்..♡


---------------------------------------------------------------------------------------------------

அன்புக்கு அடிமையாகின்றவர்களை
உங்கள் திமிருக்கு அடிமையாக்க
நினைகாதீர்கள் இதன் விளைவு
அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்..♡


--------------------------------------------------------------------------------------

யார் சொன்னது?
பெண் மட்டும் தான்
உயிரை சுமப்பாள்
என்று,!

ஒவ்வொரு ஆணின்
இதயத்தை தொட்டு பாருங்கள் அதில்
ஒரு பெண்ணின்
நினைவு உயிராக
இருக்கும்.!

-------------------------------------------------------------------------------------------------------


உன்னோடு
சேரும் கனவு
வெறும்
கனவாகவே
போய்விட்டதடா..
      

      

No comments:

Post a Comment