Friday, February 13, 2015

இந்த காதல் மட்டும்..!

அதிகமாக பேசிகொண்டிருந்தவள்
இன்று ஊமையாய் போகிறாள்..!
ஊமையாக இருந்த நான்
இன்று உளறிகொண்டிருக்கிறேன்..!

ஏனோ தெரியவில்லை
நம்மை மாற்றிய 
இந்த காதல் மட்டும்
இன்னும் மாறவில்லை..!

-------------------------------------------------------------------------------------------------------



கண் விழிக்க
ஆசையில்லை,
என் உறக்கத்தின்
கனவில்
நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை
வெறுக்கிறேன்,
விடியாத இரவும்,
முடியாத கனவும்
வேண்டும்..
உன்னை
கரம் பிடித்து
உலா வரும் கனவு


----------------------------------------------------------------------------------------


காதல் மட்டும்
வந்தால் போதும்..! 
நதியாக அவளும்
கரையாக நீயும்
விரலாக அவளும்
நகமாக நீயும்
கவிதையாக அவளும்
கற்பனையாக நீயும்
விழியாக அவளும்
இமையாக நீயும்
முத்தமாக அவளும்
சப்தமாக நீயும் ஆவாய்..!

No comments:

Post a Comment