Wednesday, January 17, 2024

ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்!

 ருத்ராட்சத்தை பராமரிக்கும் முறைகள்!


ருத்ராட்சத்தில் இயற்கையாகவே மின்காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டும், அதனால் ருத்ராட்சத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க .

1. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை விபூதி சந்தனம் வைத்து மறைக்கக் கூடாது. 

2. மாதம் ஒரு முறை ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் அல்லது பசும் பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து, புதிய பிரஷ் கொண்டு தேய்த்து எடுத்து, தூய்மையான நீரில் கழுவி, துடைக்க வேண்டும்.

3. சோப்பை பயன்படுத்தக் கூடாது. ருத்ராட்சத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனில் சாணத்தில் தயாரித்த விபூதிக்குள் வைக்கலாம். ருத்ராட்ச மாலையை சுத்தப்படுத்தும்பொழுது இதற்கான கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை கூறவும். 

4. ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும். 

ஓம் ஐயும் கிலியும் செளவும் ஸ்ரீயும் 

ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய 

ருத்ராட்சாய நம… 

5. ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தான் அதிகம் மதிப்பவரிடம் கொடுத்து வாங்கி, பின் அணிந்து கொள்ளவும். அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும். 

6. சிவன் கோவிலில் வைத்து அணிவது மிகவும் சிறப்பு. அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் கழட்டக் கூடாது.

☝🌿 ஓம் நமசிவாய 🌿☝



























No comments:

Post a Comment